Wednesday, July 24, 2013

அவன் அவள்

அவளுக்குத் தெரியும் அவனை. 
திரும்பத்திரும்பத் தேடி வருவான். 
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான். 
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது. 
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்

கூடியவள். 
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு. 
இனி நடக்கவிருப்பது வினை. 
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன் 
வினைக்கு என்ன ஆவான். 


-விக்ரமாதித்யன் நம்பி.

No comments:

Post a Comment