முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில்
வரையத் தொடங்கினாள் சிறுமி
தன் வளையலால் வட்டத்தை
அருகமர்த்திய இரு மலைகளிடையே
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள்
மேலும் சிலரோ
கட்டங்களில் வீட்டையும்
ந-இட்டு காகத்தையும்
எப்படியேனும்
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும்
ஐந்தில் நாயையும் வரைந்து
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை
உடைத்துடைத்து ஒட்டி
பூசிய நிறங்களால்
பளிங்குச் சிலையென தகதகக்க
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன
முகமெங்கும் வர்ணங்களாக...
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில்
வரையத் தொடங்கினாள் சிறுமி
தன் வளையலால் வட்டத்தை
அருகமர்த்திய இரு மலைகளிடையே
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள்
மேலும் சிலரோ
கட்டங்களில் வீட்டையும்
ந-இட்டு காகத்தையும்
எப்படியேனும்
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும்
ஐந்தில் நாயையும் வரைந்து
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை
உடைத்துடைத்து ஒட்டி
பூசிய நிறங்களால்
பளிங்குச் சிலையென தகதகக்க
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன
முகமெங்கும் வர்ணங்களாக...
-ந.பெரியசாமி.
No comments:
Post a Comment