Saturday, July 13, 2013

கவிதை இறகு - ஆனி

முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான 
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில் 
வரையத் தொடங்கினாள் சிறுமி 
தன் வளையலால் வட்டத்தை 
அருகமர்த்திய இரு மலைகளிடையே 
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள் 
மேலும் சிலரோ 
கட்டங்களில் வீட்டையும் 
ந-இட்டு காகத்தையும் 
எப்படியேனும் 
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும் 
ஐந்தில் நாயையும் வரைந்து 
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை 
உடைத்துடைத்து ஒட்டி 
பூசிய நிறங்களால் 
பளிங்குச் சிலையென தகதகக்க 
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன 
முகமெங்கும் வர்ணங்களாக...
-ந.பெரியசாமி.

No comments:

Post a Comment