Wednesday, November 28, 2012

நீ


நான் பார்க்கும்
இடங்களில்லாம்
நீ இருக்கின்றாய்,
நான் கேட்கும்
ஒலிகளிலெல்லாம்
நீ சிரிக்கின்றாய்.

என் இரவில் நிலவாகவும்
என் கவிதை கனவாகவும்
இருக்கின்றாய்.
சமயங்களில்
நானாகவும்
இருக்கின்றாய்.

இப்படி
எல்லாமுமாக நீ
இருப்பதால்தான்
நான்
நானாகவே
இருப்பதில்லை

- கவிதா இராமகிருஷ்ணன்.


உன்னுடைய வட்டமும்,
என்னுடைய வட்டமும்
ஒன்றாகக் கலந்து விட்டாலும்
நாமிருவரும்
இன்னும்
தனித்தனிதான்
அறிமுகங்களில்
என்ன
நிகழ்ந்து விடப் போகிறது?
சமாதானப் படுத்திக்
கொள்வோம்.

- சங்கரி.


தன் தலைமுடியைத் 
தானே பற்றிக்கொண்டு
விடுவிக்கும் உபாயம்
அறியாமல் 
வீறிட்டு அழும்
சிசுவைப் போல்
உன் நினைவுகளில் நானும்

-தனலெட்சுமி பாஸ்கரன் 

No comments:

Post a Comment