Monday, November 19, 2012

கவிதை இறகு - ஐப்பசி

மழை - கமலா தாஸ் கவிதை

களையிழந்த அப்பழைய வீட்டைவிட்டு வந்துவிட்டோம்
நான் வளர்த்த நாய் அங்கு மரித்துப் போனது
அதைப் புதைத்த இடத்தில் நட்ட ரோஜாச் செடி
இரண்டு முறை பூத்திருந்த வேளையில்
மேலும் வேதனையைப் பொறுக்க மாட்டாமல்
வேரோடு அதையும் பிடுங்கி எடுத்து
வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு
கிளம்பி விட்டோம்..

எங்கள் புத்தகங்களுடனும்
துணிகளுடனும் நாற்காலிகளுடனும்.
இப்போது புதிய வீட்டில் வாழ்கிறோம்
இங்குள்ள கூரை ஒழுகுவதில்லை
ஆனால் இங்கு மழை பெய்யும் போது
நனைகிற அந்த வெற்று வீட்டையேப் பார்க்கிறேன்.
கேட்கவும் செய்கிறேன்..

என் நாய் இப்போது தனித்து உறங்கும் இடத்தில்
விழுகிற மழையின் சத்தத்தை.

ஆங்கில மூலம்:
“The Rain”  By Kamala Das
[From Only The Soul Knows How To Sing]

No comments:

Post a Comment