Saturday, August 18, 2012

அலைவுகள்

கடந்த பேயிரவில்தான்
சமீபித்திருந்தது
குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்து நெய்த
கூட்டின் மரணம்

எடுத்துப் பத்திரப் படுத்திய
அறுபட்டக் கூடென்
மேசை மேல்
சலனமற்றுக் கிடக்க
ஓயாமல் மனதிலலைகிறது
கூடறுத்தக் காற்றும்
கூட்டைத் தவறிய
பறவையின் தவிப்பும்


-பொ.செந்திலரசு

No comments:

Post a Comment