skip to main |
skip to sidebar
அமர்த்தி அழகு பார்த்தோம்
நின்ற இடந்தோறும்
கடவுளையே முன்மொழிந்தோம்
மண்ணைத் தந்து
பொன்னைப் போர்த்தி
ஆயுதம் தந்து
அமானுஷ்ய பீடத்தில்
அமர்த்தி அழகு பார்த்தோம்
அனைத்தையும் தாரை வார்த்தோம்
ஒரு மயிரையும் தரவில்லை
கடவுள்!
-ஏ. தேவராஜன்.
No comments:
Post a Comment