
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
-கல்யாண்ஜி
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
- ப்ரியன்.
கட்டிடங்கள் கொண்டுவிடும்
பழம்பெரும் வறண்ட குளம்
பெருநகர் கூளங்களும்
மண்ணும் சரளையுமென
கொட்டி நிரம்புகிறது
போக்கிடமற்று ஒழிந்துபோகலாம்
கொக்கும் நாரைகளும்
சுவரிடுக்குகளில் வாழ
புறாக்களிடமும்
எச்சில்களை ஜீரணிக்க
காக்கைகளிடமும்
கற்றுக் கொள்ளட்டும்
சீக்கிரமே அவை
மனிதரைப் போல...
-வி.அமலன் ஸ்டேன்லி
கண் மூடாது இருந்திருந்தால்
நன் கொடை ரசீதுகள் கண்டே
ஓட்டாண்டிகளாகி இருப்பார்கள்!
-தரணி.
இருள்
பழகிவிட்டிருக்கிறது.
பழகாத அறையில்
இருள்
பார்க்க
மிகக் கருப்பாக இருக்கிறது.
-ச.முத்துவேல்
பேசியதை விட
நீ என்னிடம்
பேசியதை விட
நம்மைப்பற்றி
அதிகமாய் பேசுகிறது ஊர்.
-திருவைக்குமரன்.
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
-சுகுமாரன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-ஷண்முக சுப்பையா.

தனது பழைய தீவைத் தேடிச்செல்கிறது
தீவு இதுவரை அறிந்திராத
புதிய தானியத்தை விதைக்க
அலகில் முற்றிய கதிரோடு
மண்வாசனையை ஞாபகம்கொண்டு
பறவைக்கும் தீவுக்குமிடையே
ஆறாத கதிரொளி
-மாலதி மைத்ரி.
இன்றைகில்லையெனில்
நாளை
நாளையில்லையெனில்
இன்னுமொரு நாள்
இப்படித்தான் தெரியும்
வாழ்வை
நினைவு தெரிந்த நாளிலிருந்து.
-சல்மா.