Monday, February 21, 2011

ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம்

நீதிகேட்டு வழக்காடி
நாட்டை எரிக்கும் வல்லமை இல்லை
உங்களது கழுகுப் பார்வையைக் களைந்து எறியவோ
குறியை வெட்டி எறியவோ
எனக்கான ஒன்றும் இல்லை
செத்துப்போன இந்தப் புல்லும் கல்லும்
சாட்சி சொல்ல வரப்போவதுமில்லை
என்ன செய்தாலும்
உங்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதுமில்லை

மேலும்
உங்களுக்கு நான்
தாயும் இல்லை சகோதரியும் இல்லை

ஆகவே
என்னை நீங்கள் கொலை செய்ய
நிறையவே காரணங்கள் உள்ளன.

- பெரிய ஐங்கரன்.

No comments:

Post a Comment