
உனக்காக நான் கொண்டு வந்த வார்த்தைகள்
தொண்டைக் குழியை முட்டுகின்றன.
மௌனத்தை உடைக்கும் முனைப்பில்
அசட்டுத்தனத்தோடு வெகு இலகுவாகப்
பொய்யுரைக்கின்றன
வெற்றுப் புன்னகைகள் மனதைத்
துளைக்கும் பொழுதுகளில்
நாணிச் சிரிக்கின்றேன்
அப்பொழுதெல்லாம்
உதிர்ந்து கிடக்கும் வருத்தங்கள்
பேரழுகையாய் விண் முட்டுகின்றன
எனது கால இடைவெளிகளில் எல்லாம்
தொலைந்துபோன தேவதைகள் குறித்து
வனமெங்கும் பிதற்றித் திரிகிறேன்.
-நிஷாந்தினி .
No comments:
Post a Comment