முதல் சந்திப்பில் உன் முன்னால்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகினை
நான் பிய்த்தெரிந்தது பற்றி
எனக்கொன்றும் கவலையில்லை
பல நூறு வண்ணத்துப் பூச்சிகளும்
பறவைகளும் மலர்களும்
மரங்களுமுடைய என் தோட்டத்தில்
உன்னைக் குறித்து எதுவும் தெரியாமல்
அனுமதிக்க முடியாது
பிய்ந்த சிறகுகளுக்கான ரத்தம்
உன்னிடமிருந்து ஒழுகுவதைப்
பார்க்க வேண்டும் நான்.
- யூமா.வாசுகி.
"அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு"
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment