Thursday, January 21, 2010

சாலையோரம்

பிசாசு எழுதிய கவிதையாய்
தலைவிரித்து இலைகளின்றி மரம்.
கருத்த இருள் கவிய
இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும்.
தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில்
பேய்களோ வசிக்கும் ?

வராத பஸ்.
காத்திருக்கும் நான்.
அருகிலே என்நண்பன்
ஒண் டூ திரீ
ஃபோர் பை சிக்கனா
உங்கப்பா எங்கப்பா
எருமக்கடா

தொந்தரவு செய்யும்
நண்பனில்லாத வாழ்க்கை நரகம்

-டி.பிரியா.

No comments:

Post a Comment