எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.
நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு
இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை
எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?
- பி. பி. இராமசந்திரன்
Thursday, January 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment