Saturday, July 18, 2009

படித்ததில் பிடித்தது 1

ஒரு வலை தளத்தில் படித்த கவிதை
கவிஞர் ஜெய.பாஸ்கரன் எழுதியது

இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்
.
பலமுறை"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.
அடிக்கடி"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

No comments:

Post a Comment