Friday, February 8, 2013

ஸ்னேகிதம்

உன்
மௌனம்
எனக்குத் தெளிவாய்ப்
புரிகிறது...
உன் பேச்சு
என்னை மிகவும்
குழப்புகிறது...
பேசாமல் இரு.
நாம் பேச வேண்டியதை
நம் மௌனங்கள்
பேசிக் கொள்ளட்டும்...
மெள்ள் மெள்ள
ஆனால்
மிகத் தெளிவாய்..

- பா.செந்தாமரை
பொத்திப் பொத்தி
பூத்த
மௌனப் பூக்களை
சூடிக் கொண்டலைகிறாய்
சத்தமிட்டு சத்தமிட்டு
சருகாகிக் கிடக்கிறேன்.

- முருகன்.
 ஸ்னேகிதம்

நேற்று நீ மறந்து போனாய்
போகையில் முத்தம் கொடுக்க
மறுபடி மறுபடி நெஞ்சில்
இக்குறை வந்து தாக்க
பூக்களை முத்தமிட்டேன்
புற்களை முத்தமிட்டேன்

காகிதம்,பேனா,பென்சில்
கடக்கின்ற காற்று, கை விரல்
ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்.

நேற்று நீ மறந்து போனாய்
ஊர் முழுக்க ஸ்னேகிதமாச்சு
திடுமென்று நினைவு மின்னி
மறுபடி எனைப் பார்க்க வந்தாய்

உன் பக்க கணக்கு முழுவதும்
வெட்கமின்றி சொல்லுவாயோ.

- பாலகுமாரன்.
என்றாவது ஒருநாள்
வற்றக்கூடும் என் கண்ணீர்
அன்று எண்ணிக்கொள்
நீ எறிந்த கற்களை.

-கவிதாயினி ராஜேஸ்வரி.

நான்
உன் கதவைத் தட்டுகிறேன்
வாசலின் அந்தப் பக்கம் இருந்து

நீ உன் வாசலின் மறுபக்கம்
திறந்துவிட்டாய்
உனது கதவை

ஆனால்
நாம் இன்னும்
சந்திக்கவேயில்லை.

-அப்பாஸ்.

No comments:

Post a Comment