மழையில போன உளுந்து தப்பு விதையா பொழச்சிக்கிடக்காம் போன வருசம் வாங்கின கருப்பு மாடு கன்னுப்போட்டுருக்காம் அஞ்சுக்கும் பத்துக்குமா அலைஞ்சிட்டு கிடந்தவகன்னு ஏலாதி பேச்சும் நிறஞ்சுக்கிடக்காம்
இந்த மாசம் அனுப்புற பணத்தில முல்லையம்பாளுக்கு ஒரு விளக்கும் முனீஸ்வரனுக்கு ஒரு படையலும் போடசொல்வாளாம் பக்கத்து வீட்டுப்பாட்டி
போன வாரம் வேளாங்கண்ணி நடந்து போனதை அம்மா ஐநூறு தடவையா சொல்லிட்டு இருக்கா வீட்டு வேலை முடியட்டும்டா அடுத்த வாரமே ஊரை மொத்தமாக்கூட்டி விருந்து வச்சிடுறேன் இந்தவாட்டி அனுப்புற பணம் கொஞ்சம் அதிகமா இருக்கட்டும் என்கிறாள் ஒட்டகங்கள் அசைந்து மெல்ல நடக்கின்றன கொல்லும் வெயிலிலும்
தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது. வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள் பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது. ஏடுகள் நிறைந்த கல்வியால் குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள் திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில் பயப்படும் பிச்சைக்காரர்கள் சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள் வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்
மிகவும் எண்ணிய நல்லவர்கள் ஊர் கெட்டது போகட்டும் என்று உவமைக்கான அரிச்சந்திரன் கெடாதிருக்க இடுகாட்டில் குடிவைத்தார்கள்.