Friday, August 1, 2014

கவிதை இறகு - ஆனி

மாயக் கவித்துவம்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலோன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில்மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

-சி. மோகன்.

No comments:

Post a Comment