Friday, August 23, 2013

கவிதை இறகு -ஆவணி

நீ...நான்...மற்றும்...
சிறகை அசைத்தேன் 
வெளியில் பறந்தேன் 

தானியம் கண்டு 
தரையை தொட்டேன் 

கிளறிப் பார்க்கும்முன் 
சிக்கினேன் வலையில் 

எத்தனை அசைத்தும் 
எழும்பலை சிறகு 

எதிர்பார்ப்புடனே 
எங்கும் என் துழாவல் 

என்றோ வரலாம் 
என் போல் பறவை 

சிறகை அசைத்து 
சிறகை அசைத்து 

வெளியில் பறப்போம் 
வலையுடன் நாங்கள்

 -தி.சந்தானம்
நீ...நான்...மற்றும்...

No comments:

Post a Comment