
சூடிக்கொண்டிருந்த பெண்
என்ன நினைக்கிறாள்
சீர்காழி பஸ்ஸில் ஏறி
சிதம்பரம் போகிறாளா?
வழியில் எங்காவது
இறங்கி விடுவாளா?
அலுவலகம் போகிறாளா?
வகுப்பிற்குச் செல்கிறாளா?
வீட்டிற்குத்தான் போகிறாளா?
ஒற்றை ரோஜா
புத்தம்புது மலராய் மினுமினுக்க
அவள் கன்னத்திலும்
சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?
-அழகியசிங்கர்.
No comments:
Post a Comment