Friday, March 23, 2012
வயதின் தூக்கம்
வயதின் தூக்கம்
பாலத்தின் மீது வாகனங்கள்
பெருத்த இரைச்சலோடு செல்கின்றன
மூன்று சக்கர சைக்கிளை
ஒருவர் எழுந்து மிதிக்கிறார்
ஒரே வயதுடைய
குழந்தைகள் அதில் தூங்குகின்றன
எல்லாமும் மறந்து அவை
அவற்றின் நினைவில் இருக்கக் கூடும்
ரயிலோ பேருந்தோ படுக்கையறையோ
இல்லையேல் ஊஞ்சலோ இல்லை
எப்போதும் தூங்கும் அம்மாவின் மடியோ
எப்படி இருந்தாலும்
தூக்கம் ஒன்றுதான் அவைகளுக்கு.
-கோவிந்தராஜ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment