Thursday, June 16, 2011

கவிதை இறகு - ஆனி

"வானவில் கனவுகளின் வரவேற்பு வளையம்"
"இல்லை! மேகத்திற்கான வேகதடை"
-
"நான் மழையின் ரசிகன்"
"நீ மழைக்கு ஒதுங்க வீடிருக்கிறது.
ஆனால்
மழை ஒதுங்கத்தான் என் வீடிருக்கிறது!"
-
"ஷெல்லி
மில்டன் படித்ததுண்டா?"
"அவர்கள் படித்தார்களா என்று
எனக்குத் தெரியாது"
-
"கை நாட்டா?"
"நாட்டின் கை"
-
"சங்கீத ஞானமுண்டா?"
"பஞ்சப்பாட்டு தெரியும்"
-
"குரு யார்?"
"வேர்க்குரு"
-
"உன் பெற்றோர் நாட்டுக்கு
என்ன செய்தார்கள்?"
"என்னைச் செய்தார்கள்"
-
"நீ என் மயிருக்குச் சமம்?"
"வெட்ட வெட்ட துளிர்ப்பதால் சொல்கிறாயா?"
-
"இவ்வளவு திமிராக்ப் பேசுகிறாயே
உன்னைப் பற்றிச் சொல்"
"உனைனப் பற்றியும் சொல்கிறேன்
நீ
ஓய்வூதியம் பெறுகிறவன்
நான் உழைப்புக்கே
ஊதியம் கிடைக்காதவன்!"

-கவிஞர் விவேகா.
'உயரங்களின் வேர்'

No comments:

Post a Comment