skip to main |
skip to sidebar
அக்காவின் பைபிள்அக்காவின் பைபிளில் இருப்பவை:தையல் விட்ட ரேஷன் கார்டுகடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்கந்துவட்டிக்காரர்களின் அட்டைதிருவிழா, பண்டிகை நோட்டீசுகள்அண்ணன் குழந்தையின் போட்டோகுட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்ஒரு நூறு ரூபாய் நோட்டுஎஸ்எஸ்எல்சி புத்தகம்.அக்காவின் பைபிளில் இல்லாதவை:முன்னுரைபழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுநிலப்படங்கள்சிவப்பு மேலட்டை.-மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்.தமிழில் : சுகுமாரன்
ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்
அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?
-(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)
சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி
தமிழில் மதுமிதா.
கதைச் சொல்லுகதைச் சொல்லுஎனக்கொரு கதைச் சொல்லு.உன் கதையில்..ஏழு கடல்கள்இடியுடன் கூடிய புயல்தீ கக்கும் டிராகன்இவர்களுடன் இருக்கட்டும்அரக்கனைப் பரிகாசம் செய்யும்ஒரு சின்னப் பச்சைக்கிளிமுத்துக்களைக் கொறித்துக்கொண்டு.இருக்கட்டும்முடிவில்லாத சிக்கலான பாதைவெளிவரமுடியாமல்ஒவ்வொரு படியிலும்தடைக்கற்கள்பயப்படவில்லை.இந்த மாதிரிக் கதைகளைஎனக்குத் தெரியும்.எல்லா கதைகளிலும்எப்போதும்கடைசியில்இனிமையாக வாழ்ந்ததாகசுபமாக முடியும் என்று.கதைச் சொல்லுஎனக்கு.மூச்சுத் திணறும் அணைப்பில்வேப்பமரத்தடியில்அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..கதைச் சொல்லு எனக்கு.உன் கதைக் கேட்டுஅடிப்பட்ட மான் போலதுடிதுடித்து அழவேண்டும்.கதை முடிவில்தொலைந்து போன குழந்தைகள்சந்தர்ப்பவசத்தால்ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..கதைச் சொல்லு எனக்கு.ஒரே ஒரு ஊரில்ஓர் இளவரசியாம்அவளைக் காதலித்தானாம்துணிகளை வெளுக்கும் அவன்..இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..கதைச் சொல்லு எனக்கு.கதைச் சொல்லு.- பிரதிபா நந்தகுமார்.
நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்
- சல்மா.
சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.- சிறீ.நான்.மணிகண்டன்.
மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?
-இரா.பூபாலன்.
….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.
‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது’
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்’
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’
-வத்ஸலா.