skip to main
|
skip to sidebar
தமிழ் இனிது
Sunday, November 21, 2010
பிரிய மழை
பழங்கஞ்சியும்
பயத்தந்
துவையலும்
ஏர்
உழும்
மாமனுக்கு
எடுத்துப்
போவாள்
அவளுக்குப்
பிடிக்குமென்று
ஈச்சம்
பழங்களை
துண்டில்
மூடித்
தருவான்
அவன்
வானம்
பார்த்த
பூமியில்
எப்போதும்
பெய்தபடி
பிரிய
மழை
.
-
யுகபாரதி
.
கவிதை இறகு-கார்த்திகை
"
என்ன
செய்து
கிழித்தார்
பெரியார்
?"
பனை
ஏறும்
தந்தை
தொழிலில்
இருந்து
தப்பித்து
தலைமைச்
செயலகத்தில்
வேலை
சேய்பவர்
கேட்டார்
.
"
பெரியாரின்
முரட்டுத்
தனமான
அணுகுமுறை
அதெல்லாம்
சரிப்பட்டு
வராதுங்க
"
இது
முடிவெட்டும்
தோழரின்
மகனான
எலக்ட்ரிக்கல்
என்ஜினியர்
.
"
என்னங்க
பெரியார்
சொல்லிட்டா
சரியா
?
பிராமணனும்
மனுசந்தாங்க
.
திராவிட
இயக்கம்
இலக்கியத்துல
என்ன
செஞ்சி
கிழிச்சது
?"
இப்படி
'
இந்தியா
டுடே
'
பாணியில்
கேட்டவர்
அப்பன்
இன்னும்
பிணம்
எரித்துக்
கொண்டிருக்க
இங்கே
டெலிபோன்
டிபார்ட்மென்டில்
'
சுபமங்களா
'
வை
விரித்தபடி
சுஜாதா
சுந்தர
ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய
சர்ச்சை
செய்து
கொண்டிருக்கும்
அவருடைய
மகன்
.
ஆமாம்
அப்படி
என்னதான்
செய்தார்
பெரியார்
?
-
வே
.
மதிமாறன்
.
Friday, November 12, 2010
சந்தித்தல்
சந்திப்பதற்கென
ஒரு
நாளின்
மாலையைத்
தேர்ந்தேன்
கொஞ்சம்
கவிதைகள்
கனிவூட்டும்
இன்னிசை
காதலின்
சுவை
கலந்த
தேநீர்
வாசனை
தந்து
வரவேற்க
மலர்கள்
எல்லாம்
ஆயத்தமாக
.
அழகிய
மாலைகளும்
கடிகாரமும்
யாருக்காயுங்
காத்திருப்பதில்லை
மஞ்சள்
மாலை
மெதுவாய்க்
கறுக்க
மணலிற்
பரவும்
நீரெனப்
பரந்தது
இரவு
நிகழாது
போன
வருகையும்
பகிரப்படாத
கவிதைகளும்
சொல்லப்படாத
காதலும்
பருகப்படாத
தேநீரும்
வாடும்
பூக்களோடு
ஒவ்வொரு
அழகிய
மாலையிலும்
எங்கோ
ஒரு
வீட்டின்
தோட்டத்தில்
கைவிடப்படுகின்றன
.
-
வினோதினி
.
Wednesday, November 3, 2010
காதலைக் காதல் என்றும் சொல்லலாம்
மரணம்
என்று
சொல்
வேதனை
என்று
சொல்
கொடூரம்
என்று
சொல்
தண்ணீர்
என்று
சொல்
விவேகம்
என்று
சொல்
உற்சாகம்
என்று
சொல்
ரத்தருசி
என்று
சொல்
திருடும்
கை
என்று
சொல்
சித்ரவதை
என்று
சொல்
பிணந்தின்னி
என்று
சொல்
காலையில்
எழும்போதே
காத்துகிடக்கும்
நாய்
என்று
சொல்
விளக்கு
இல்லாத
ராத்திரியில்
கொட்டின
தேள்
என்று
சொல்
ரயில்
ஏறிச்
செத்துப்போன
அவளின்
கழுத்தில்
கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று
சொல்
நல்ல
புணர்ச்சியிலும்
பாதியில்
காரணம்
தெரியாமல்
அழும்
பெண்
என்று
சொல்
காதலைக்
காதல்
என்றும்
சொல்லலாம்
.
-
பூமா
ஈஸ்வரமூர்த்தி
.
"
காதலைக்
காதல்
என்றும்
சொல்லலாம்
"
கதவு
வழக்கம்போல்
என்
அறையில்
நான்
என்னுடன்
இருந்தேன்
கதவு
தட்டுகிற
மாதிரி
கேட்டது
"
யார்
"
என்று
கேட்டேன்
"
நான்
தான்
சுசீலா
கதவைத்
திற
"
என்றாள்
எந்த
சமயத்தில்
எந்தக்
கதவு
திறக்கும்
என்று
யார்தான்
சொல்ல
முடியும்
?
-
நகுலன்
.
நீ வருவதென்பது
பழுத்ததாய்த்
தேடி
வந்தமர்கிறது
கிளி
.
எதுவென்று
கேட்க
முடியாது
.
காடெங்கும்
பாம்புகள்
.
சொல்லித்
தீராத
கதை
ஒன்றும்
புரிவதாக
இல்லை
.
உயர
உயர
எழும்புகிறது
சுவர்
.
உறைக்குள்
மின்னுகிறது
வாள்
.
கதிரவன்
மறையும்
நேரமிது
.
இருள்
சூழ்ந்து
இமைமூட
நீ
வருவதென்பது
வராமலேயே
இருப்பதாகிறது
.
-
அழகுநிலா.
Monday, November 1, 2010
வரம்
நின்றிருக்கிறேன்
நானும்
அவ்விடத்தில்
மரமில்லாதொரு
பொழுதில்
என்றாலும்
என்
மீதில்
அமர்ந்ததில்லை
ஒரு
நாளும்
எந்தப்
பறவையும்
-
குகை
.
மா
.
புகழேந்தி
.
ஆத்தா
அடிச்சி
அஞ்சாறு
மணி
நேரமாச்சு
அதென்னமோ
சாயந்தரம்
அப்பனக்
கண்டதும்
தான்
விபரம்
சொல்லி
வலிக்குது
குழந்தைக்கு
!
-
சக்திகா
.
கூரையைப்
பிய்த்துக்
கொண்டு
கொடுக்கின்ற
கடவுள்
முதலில்
எங்களுக்கு
கூரையைக்
கொடுக்கட்டும்
...!
-
ஆதம்பாவா
.
என்
பேரன்
பேத்திகளுக்கு
நான்
தாத்தா
எங்க
வூர்
இளைஞர்களுக்கு
நான்
தான்
தளபதி
.
-
மு
.
சுயம்புலிங்கம்
.
”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்”
வரம்
நான்
என்ன
கேட்டேன்
?
நீ
என்ன
தந்தாய்
?
புரியாததெல்லாம்
புரியக்
கேட்டால்
,
புரிந்ததெல்லாம்
புரியாதுபோக
வரம்
தருகிறாய்
!
-
குவளைக்கண்ணன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Stat counter
தமிழ் இனிது
Loading...
Followers
Blog Archive
▼
2017
(1)
▼
October
(1)
2 சைவரும் 1 சைவக்காரியும் நீங்க சைவமா? ம்..ம...
►
2015
(2)
►
July
(2)
►
2014
(8)
►
August
(3)
►
July
(4)
►
March
(1)
►
2013
(25)
►
December
(3)
►
October
(1)
►
August
(3)
►
July
(8)
►
June
(2)
►
March
(1)
►
February
(4)
►
January
(3)
►
2012
(54)
►
December
(2)
►
November
(3)
►
September
(7)
►
August
(6)
►
July
(7)
►
June
(1)
►
May
(13)
►
April
(3)
►
March
(2)
►
February
(4)
►
January
(6)
►
2011
(40)
►
December
(4)
►
November
(1)
►
October
(2)
►
September
(4)
►
August
(10)
►
July
(3)
►
June
(2)
►
May
(2)
►
April
(6)
►
March
(2)
►
February
(3)
►
January
(1)
►
2010
(108)
►
December
(3)
►
November
(9)
►
October
(9)
►
September
(4)
►
August
(6)
►
July
(4)
►
June
(15)
►
May
(19)
►
April
(1)
►
March
(19)
►
February
(13)
►
January
(6)
►
2009
(56)
►
December
(2)
►
November
(4)
►
October
(9)
►
September
(9)
►
August
(21)
►
July
(6)
►
May
(1)
►
April
(3)
►
February
(1)